783 products
783 products
783 products
Paravai Yudham/பறவை யுத்தம் -பா.ராகவன் /Pa.Raghavan
Regular price Rs. 160.00
இந்தத் தொகுப்பின் முதல் பதிப்பு 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தப் பதிப்பு.
ஒரு பதிப்பே காணாமல் போய் கால் நூற்றாண்டுக்குப் பிறகு திரும்பக் கிடைத்த கதை, இத்தொகுப்பில் இல்லாத - ஆனால் இருந்திருக்க நியாயமுள்ள கதை.
G Indri Amaiyaadhu Ulagu/G இன்றி அமையாது உலகு- Sivaraman Ganesan/சிவராமன் கணேசன்
Regular price Rs. 210.00
எலான் மஸ்க் ‘நான் பார்த்து பயங்கொள்ளும் ஒரே கார்பரேட் நிறுவனம் கூகுள் மட்டும்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெஃப் பேசோஸ், ‘கூகுள் என்பது ஒரு மலை போன்றது, அதில் ஏற முயற்சி செய்யலாம், ஆனால் அதை நகர்த்துவது என்பதெல்லாம் குதிரைக்கொம்பு’ என்கிறார். மார்க் ஸூகர்பெர்க், கூகுள் நிறுவனத்தில்தான் உலகின் தலைசிறந்த மூளைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றையாவது என்னுடைய நிறுவனத்திற்குக் கடத்திக்கொண்டு போய்விடவேண்டும் என்று எப்போதும் நினைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேட்டி கொடுக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல. இன்று உலகின் சர்வ டிஜிடல் காரியங்களிலும் ஏறி அமர்ந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது கூகுள். நானின்றி அசைவதில்லை அகிலம் என்று அமைதியாகவும், பூடகமாகவும் சில நேரங்களில் பூதாகாரமாகவும் வெளிப்படுகிறது. இந்த அதி நவீன டிஜிடல் காலத்தில் கூகுளை ‘நீயின்றி அமையாது உலகு’ என்று சொல்வதில் ஆழ்ந்த பொருளுள்ளது. அது வளர்ந்து, வேர்கொண்டு இன்று செழித்து நிலைத்திருக்கும் கதையை விரிவாகச் சொல்கிறது இப்புத்தகம்.
சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 வருடக் கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். கணினி, நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றைப் பற்றித் தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Maadheeswari/மாதீஸ்வரி- Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 290.00
ஷாராஜின் ‘துலுக்குவார்பட்டி ட்ரையாலஜி’ என்னும் மும்மை நாவல்களில் முதலாவது பெருந்தொற்று. இரண்டாவது இந்த மாதீஸ்வரி.
ராணுவ ஒழுங்கு போன்ற கட்டுப்பாட்டில் ஊரை நிர்வகித்து வந்தவர், முன்னாள் ஊர்த் தலைவரான மிராசுதார் சென்ராயன். அவரது மரணத்துக்குப் பிறகு அவரின் விதவையான மாதீஸ்வரி, பிற மிராசுதார்கள், பண்ணையார்களின் எதிர்ப்புக்கிடையே ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், கல்வியறிவற்றோர், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இந்நிலையில் அவளது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத அசம்பாவிதங்களாலும், அதன் பின்விளைவுகளாலும் குடும்பம் சிதைந்து, ஊரும் பாதிக்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் அவள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, ஒரு வார காலத்தில் இன்னும் சில எதிர்பாராத சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்தப் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தை முன்னிட்டு மாதீஸ்வரி, அவளின் இளைய மகன், பேரன் ஆகியோருக்கிடையே நிகழும் பாசப் போராட்டம் இந்த நாவல்.
Andhi Vaanin Ayiram Velli/அந்தி வானின் ஆயிரம் வெள்ளி- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 120.00
நடுநிசியில் ஏதோ ஒரு பெரிய சுரங்கப்பாதைக்குள் புதைந்துபோய்ச் சிக்குவதை போன்ற கனவுகள் இப்போது எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு உருவகத்தை என்னால் அந்த கனவில் இருந்து மொழிபெயர்த்துக்கொள்ள இயல்கிறது. அப்படி திடுக்கிடும் நேரங்களில் எல்லாம் நான் என் மனதில் தேங்கிக் கிடக்கும் அன்பானவர்களின் முகங்களை நினைவில் இருத்திக் கொள்கிறேன். அது எனக்கு பெரிய பாரமில்லாமல் போகச் செய்கிறது. இத்தொகுப்பில் இருக்கிற அந்தக் கதைகள் எல்லாமே அந்த முகங்களின் பிரதிபலிப்புதான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு பெண் எழுதும் பொழுது எப்போதுமே ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது - இது அவருடைய உண்மையான வாழ்வில் நிகழ்ந்ததா இல்லையா என்ற பெரும் கேள்வி வாசிக்கும் பலருக்கு இருந்தே வருகிறது. ஆமாம். இவற்றில் நிறைய கதைகள் என் வாழ்க்கையில் நடந்த கதைகள்தான் நான் இல்லை என்று மறுக்கவே இயலாது. ஆனால் அவை முழுவதுமாக என் வாழ்க்கையா என்றால் நிச்சயமாக அல்ல. என்னால் ஒவ்வொரு முகங்களின் பின்னால் இருக்கும் மனங்களுள் பிரயாணிக்க முடிகிறது. அதுதான் ஒரு எழுத்தாளருக்கான சவாலாக பார்க்கிறேன். அப்படி பிரயாணிக்கையில் சில முகங்களின் சாயல்கள் ஒன்றுபட்டு இருப்பதை நான் பல காலமாக புலனாய்வு செய்தே வந்திருக்கிறேன்
Pulli Vandugal Prasavikkadha Kaalam/புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்- P. Kalimuthu/ப. காளிமுத்து
Regular price Rs. 120.00
இன்மையின் அதீத உருவழிதல், விளிம்பு வாழ்வின் சிதிலங்களில் இருந்து தன் மொழிக்கு சாரங்களைப் பெற்றுக் கொள்பவராக, பிரதேச அழகியல் மிளிரும் சொற்களைத் தனது கவிதைகளில் மிகச் சாவகாசமாகக் கையாளும் ஒருவராக இந்தத் தொகுப்பின் வழி தனது புதிய அடையாளங்களுடன் வெளிப்பட்டிருக்கிறார் கவிஞர் காளிமுத்து
மொழிக்குள் விரும்பி ஒளிந்து கொள்ளும் தன்மை அதன் அடர்வில் புதிர்த்தன்மையை ஏற்றி விடுகிறது. வாழ்வில் வெதுவெதுப்பான தண்ணீரை, ஒரு முன்மதிய நேரத்து நிழலை உவமையாக்குவது மாதிரி அதிகப் பிரயத்தனங்களற்ற ஒரு தனி நடையை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
- நேசமித்ரன்
Claude Monetyin Marathadi Pen/களாட் மோனெயின் மரத்தடிப் பெண்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 70.00
நாம் விழித்துக்கொள்ள விரும்பாத கனவொன்றை இக்கவிதைகளால் உருவாக்கி அளித்திருக்கிறார் கார்த்திகா. இங்கே பரபரப்பான மாநகரச் சாலையொன்றின் நடுவே ஒரு சிறிய நீரோடை உலகை சிருஷ்டிக்கிறார். ஓடை போல முன்னோக்கியே ஓடும் காலம், ஊஞ்சல்போல பின்னோக்கியும் வந்தால் என்ன என ஏங்குகிறார். தன் கவிதைகள் மூலம் அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார். கடந்த காலத்தின் திரும்ப முடியாத உலகங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நாம் சாதாரணமாகத் தவறவிடும் உலகங்களையும், தருணங்களையும் தன் கவிதைகளில் உறைய வைத்து விடுகிறார்.
சக மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆமவடைகளையும் பரிவுடன் பார்க்கும் தருணங்கள் வழியாக சாதாரண உலகத்தின் பின்னாலிருக்கும் அதிசாதாரண உலகுக்கு ஒரு பிடி கிடைக்கிறது.
ஆமவடைகளைப் போல அரிய, பரிபூரணமான, எளிய, சின்னஞ்சிறு கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பு படிக்கத் திகட்டுவதில்லை.
- முகுந்த் நாகராஜன்
London Diary/லண்டன் டைரி -Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 200.00
Arpa Vishayam/அற்ப விஷயம்- Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 280.00
எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும் விநியோகிக்க முந்தாநாள் போட்ட இனிப்பும் வாங்கப் பக்கத்து ஹோட்டலுக்கு நடக்கும்போது மனசை அலைக்கழிக்கும் விஷயம், பெயர் வைப்பது. நம்முடைய இலக்கிய, சமூக, அரசியல் சார்புகளின் பின்னணியில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கயல்விழியும், கல்பனாவும், ஜீவபாரதியும் சகலராலும் நிராகரிக்கப்பட, பிறந்திருக்கிற குழந்தை ஸ்வப்னா ஆகிறது. சந்தோஷ் ஆகிறது.
Raayar Coffee Club/ராயர் காப்பி கிளப்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 350.00
விடியோ பஸ் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.
விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.
தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.
எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.
பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.
Pagal Iravugalai Kondu Varugira Paravai/பகல் இரவுகளைக் கொண்டுவருகிற பறவை-Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 320.00
2004-ல் வெளியான ஷாராஜின் வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, அதன் மெல்லியல் கதைகளுக்காக சக இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் சிலரின் விருப்பங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அக் கதைகளை இன்னமும் நினைவுகூர்ந்து சிலாகிக்கும் சிலர் அதன் மறுபதிப்பைக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவிப்பார்கள். அதற்கிணங்க, அத் தொகுப்பில் உள்ள பத்து கதைகளோடு, இடைக் காலத்திலும் கடந்த ஓரிரு வருடங்களிலும் எழுதிய, இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத சில புதிய கதைகளும், ஐந்து நையாண்டிக் கதைகளும் சேர்த்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
Thirakka Mudiyaadha Kottai/திறக்க முடியாத கோட்டை- Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்த காலத்திலிருந்தே அவர்களது இலக்கு இதுவே. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். இவற்றின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது மக்கள் புரட்சியில் முடிந்தது. மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உருவான புத்தகம் இது. ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்து, தற்போது புத்தகமாகியிருக்கிறது.
Siru Thuli Perum Panam/சிறு துளி பெரும் பணம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 140.00
Vada Korea Private Limited/வட கொரியா பிரைவேட் லிமிடெட்- Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 650.00
சர்வாதிகாரம். பஞ்சம்.
பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர
வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை
முற்றிலும் விலக்கி, வட கொரியாவின்
அத்தனைக் குற்றச் செயல்பாடுகளின் பின்னணியையும் ஆதாரபூர்வமாக
ஆராய்கிறது இந்நூல்.
கிம் ஜாங் உன் என்கிற மனிதர் எப்படி உருவானார்? அவரது தாத்தாவும் தந்தையும் வகுத்த
சர்வாதிகாரப் பாதையை
எவ்வாறு அவர் நவீனமாக்கினார்?
எப்படி அவரால் அமெரிக்காவின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிவைக்க முடிகிறது?
சோற்றுக்கே வழியில்லாத ஒரு நாடு
எப்படி அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது? ஏவுகணைகளைச் செலுத்துகிறது?
இது ஒரு மர்ம தேசத்தின் சோக வரலாறல்ல. எழுபத்தாறு ஆண்டுகளில் ஒரு நிலமே இறுகி
வெடி குண்டாக உருமாறியிருக்கும்
அபாயத்தின் சரித்திரம்.
A Tale of Two Cities Abridged Version-Sarah Tharakan(Charles Dickens)
Regular price Rs. 370.00
Enter the chaotic streets of London and Paris during the French Revolution, where the fate of these two cities are connected in a story of love, bravery, and second chances. In this abridged version of Charles Dickens' classic novel, follow the lives of Charles Darnay and Lucie Manette as they struggle through the troubles of the Revolution and of the human heart. With its gripping plot twists and memorable characters, "A Tale of Two Cities" is a compelling journey through history and humanity that will captivate readers young and old.
Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy
Regular price Rs. 180.00
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி. இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’
ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும்.
அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.
AI Or Eliya Arimugam/ஏஐ ஓர் எளிய அறிமுகம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 370.00
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்று நோக்கில் விவரிப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் விளக்கும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
செயற்கை நுண்ணறிவு கல்வித்துறை துவங்கி காவல்துறை, சட்டம், உளவியல், அகழ்வு, வங்கிச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி பயன்படுகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. துறை தோறும் ஏஐ நுட்பத்தை விவரிப்பதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வரலாற்று நோக்கிலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது. இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் இதழ் மற்றும் தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Paarka Marutha Paravaigal/பார்க்க மறுத்த பறவைகள்-சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian
Regular price Rs. 200.00
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.”
- அசோகமித்திரன்
Nalam Tharum Vitamingal/நலம் தரும் வைட்டமின்கள்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 210.00
நம்முடைய உடலுக்கு நன்மைகளை அள்ளித் தந்து சிறப்பாகச் செயல்படவைக்கும் வைட்டமின்களைப் பற்றிய விரிவான, விளக்கமான, தெளிவான அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல். எதைச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், அதனால் என்ன நன்மை, நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மற்ற குறிப்புகள் என்னென்ன என்று உங்களுடைய உணவுப் பழக்கத்தைச் செம்மையாக்குவதற்கான சிறந்த கையேடு இது.
Salman Rushdie/சல்மான் ரஷ்டி-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 130.00
இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்திவந்தன. இத்தனைக்கு நடுவிலும் அவர் படைப்பூக்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் பெரிய செய்தி, பாடம்.
இந்தியாவைக் கதைகளின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ரஷ்டியின் பரபரப்பான வாழ்க்கைக் கதை இது, அவருடைய இலக்கியம் தொடங்கிய ஊற்றுக்கண்ணையும், வளர்ச்சியையும், அவர் உண்டாக்கிய தாக்கங்களையும் துல்லியமாக விவரிக்கிறது.
Unnaipol Oruvar/உன்னைப்போல் ஒருவர்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில் சில முக்கியமான பாடங்களும் இருக்கலாம், சாதனையாளர்களின் சிறுவயதுப் பண்புகள் அவர்களுடைய ஆளுமையில் எப்படிப் பிரதிபலித்தன என்று நாம் தெரிந்துகொள்ளலாம், முயன்றால் யாரும் பெரிய அளவில் வளரலாம், சாதிக்கலாம் என்பதும் புரியும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பிரபலங்களின் சிறுவயது நிகழ்வுகளைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பீர்கள், இவர்களைப்போல் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
Inikkum Tamil/இனிக்கும் தமிழ்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின்றன.
இந்நூல் சில சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றை விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது, அவற்றின் எழிலையும், அவற்றுள் பொதிந்திருக்கிற தகவல்களையும் எடுத்துக்காட்டி மகிழ்வூட்டுகிறது, மேலும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
Arive Sivam/அறிவே சிவம்- Ram Suresh/ராம் சுரேஷ்
Regular price Rs. 320.00
எல்லாப் போர்களுமே தொழில்நுட்பத்துக்கான போர்கள்தாம். கல்லால் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லைக் கண்டுபிடித்த தரப்பு வென்றது. ஈட்டி அம்பு தரப்பை யானையைப் பழக்கக் கற்ற தரப்பு வென்றது. துப்பாக்கி பீரங்கியைக் கண்டுபிடித்த தரப்பு என்று அணுகுண்டு வரை பலமான ஆயுதத்தின் தரப்புதான் வென்றிருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் அறிவே ஆயுதமாகிவிட்ட்து. செய்தித்தாள்களை வைத்து 1940-50களில் ஒரு புரட்சி நடந்தது, 90களில் தொலைக்காட்சி வைத்திருக்கும் கட்சி வென்றது, ஃபேஸ்புக்கைக் கைப்பற்றிய கட்சி
2010களில் முன்னிலை பெற்றது.
மேலோட்டப் பார்வைக்கு ஆயுதமாகத் தெரியாத தொழில்நுட்பத்தையும் ஆயுதமாக்கி அழிப்பதில் வல்லவன்
மனிதன். அவனை நோவதா, அவன் கையில் ஆயுதம் தரும் அறிவை நோவதா? அலசுகிறது இந்த நாவல்.
ChatGPT Saritham/சாட்ஜிபிடி சரிதம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 350.00
சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. அதோடு, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு பொதுவாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகிறது. ஏஐ விவாதத்தில் அதன் அடிப்படை அம்சங்கள் தொடர்பான புரிதல் அவசியம் எனும் வகையில், ஏஐ நுட்பங்களை விளக்க முற்பட்டுள்ளதோடு, ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அலசுகிறது. செயற்கை தரவுகள், பொய் ஆக்கங்கள் உள்ளிட்ட நவீன பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஏஐ பரப்பில் இந்த நூல் தொட்டுக்காட்டும் புள்ளிகள் அநேகம். இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் பதிப்பு மற்றும் தமிழ் யுவர்ஸ்டோரியில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Dvijottamar/த்விஜோத்தமர்- V. Balakrishnan/வி பாலகிருஷ்ணன்/தமிழில்-நரசிம்மன்
Regular price Rs. 120.00
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உள்ளூர அவரைக் குத்திக் கொன்றாலும், அந்தத் தலைசிறந்த ஆசான் போர்க்களத்தில் இரண்டு அக்ஷௌஹினி வீரர்களைக் கொன்று குவித்தார். தனது உயிரை தானே துறந்துகொண்ட துரோணரின் உயிரில்லா உடலிலிருந்து தலை திருஷ்டத்யும்னனால் துண்டிக்கப்படுகிறது.
எதிர்காலம், தற்காலத்தைப் போலவும் கடந்தகாலத்தைப் போலவும், வெறுமையாகத்தான் தெரிகிறது. ஒரு சாபம் சபிக்கப்படுகிறது. அமைதிகூட இன்னும் மௌனமாகிறது. இப்படித்தான் பாலா, நம் இதிகாசக் கதைகளுக்குத் தனக்குரிய தனி பாணியில், புதிய ஒரு பரிமாணம் கொடுக்கிறார். அந்த அற்புதமான கதைகளைத் தற்காலத்திற்கேற்ப அழகாக வடிவமைக்கிறார். அவர் எழுத்துகளிலும், தயாரிப்புகளிலும் பெரிய பலமாகத் தென்படும் அந்த “மினிமலிசம்” - மிக எளிமையான நடை. ஆனால், அதில் ஒரு ஆழம், அமைதி. ஆனால் அதில் ஒரு குமுறல். அவரின் படைப்புகளில் அவ்வப்போது தென்படும் கவிதைகளைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதே சமயம், மேடையில் அரங்கேறும் நடனமும் காண அழகாக இருக்கும். இவை அனைத்தையும் விடவும் மிக முக்கியமானது, சமகால இந்திய நாடக உலகில் பாலா ஒரு முக்கியமான நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
சுரேந்திரநாத் சூரி
இயக்குனர், நாடக ஆசிரியர்.
Vaidheeswaran Kathaigal Muzhu Thoguppu/வைதீஸ்வரன் கதைகள் முழு தொகுப்பு - Vaidheeswaran/வைதீஸ்வரன்
Regular price Rs. 500.00
1935ஆம் ஆண்டு பிறந்த எஸ்.வைதீஸ்வரன், நவீனச் சிற்றிதழ் இலக்கியத்தின் முன்னோடியான ‘எழுத்து’வில் தமது தடத்தைப் பதிக்கத் தொடங்கி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகளில் மட்டும் அல்லாமல் சிறுகதைகளிலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் இன்றுவரை இயங்கிவருபவர்.
தமக்குள் ஒரு ஓவியத்தின் வண்ணக் கலவைகளையும், கவிதையின் படிம மொழியையும், நிதர்சன வாழ்வியல் தரிசனத்தையும், கண்ணுக்குப் புலப்படாத ஒரு தத்துவத் தேடலையும் அவரது ஒவ்வொரு சிறுகதையும் உள்ளடக்கி இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒரு நீண்ட ஆயுட்காலத்தின் வாழ்வனுபவங்களை நுண்மையான மனிதநேயப் பார்வையுடன், வாழ்வைப் பற்றிய ஆழ்ந்த தரிசனங்களை உணர்த்தக்கூடிய சாத்தி யங்கள் கொண்டிருப்பவையாக அமைந்துள்ளன.
Karamundar Voodu/கரமுண்டார் வூடு- Thanjai Prakash/தஞ்சை ப்ரகாஷ்
Regular price Rs. 420.00
இந்த எனது கரமுண்டார் வூடு நாவல், எனது கண்டுபிடிப்பு அல்ல. கண்முன்னே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊத்தையும், உடைசலுமாகிப் போன கனவுகளுமல்ல. வெறும் வாழ்க்கையின் கரடுமுரடான உடைசல்கள் உருவம் பெற முடியாத, கரடு தட்டிப்போன நேற்றும் இன்றும் நாளையும் ஆன எங்கள் வாழ்க்கை. இவை ஓர் ஒழுங்கான தத்துவத்துக்குள்ளோ, ஜாதிக்குள்ளோ, நம்பிக்கைக்குள்ளோ, சிந்தனைக் குறிக்கோளுக்குள்ளோ அடங்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு எனக்கும் உண்டு. இந்த வாழ்வின் இந்த அம்சங்களை என் முகத்தில் அறைந்து சொன்ன சத்தியங்களை உங்கள் முன் வைக்கவே இந்த நாவலை எழுதியிருக்கிறேன். இரண்டு நூற்றாண்டுகளாய் சிதிலமடைந்துபோன ஒரு ஜன சமூகத்தின் சரிவை நேரடியாகவும், செவி வழியாகவும், உணர்வின் வாசல்கள் வழியிலும் நான் அறிந்துகொண்ட உணர்வுகளை, உங்களுக்கும் மனசுக்குமாய் இடமாற்றம் செய்தது மட்டுமே எனது பணியாக இருந்தது.
இந்த நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வோர் அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவற்றையும், என்னையும் படித்துக் கண்ணீர்விட்டுக் களைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடிவந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும் பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும், இவற்றுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய்ச் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை. இவற்றின் கனவுத்தன்மைகளை முறித்து எறியக் கற்றுத்தந்து எனது கனவுகளை நிஜமாக்க இவற்றை மறுக்கவும் துறக்கவும் ஏற்கவும் கற்றுத்தந்த என் தந்தை எட்வர்டு கார்டன் கரமுண்டார் என்கிற முரட்டுக் கள்ள ஜாதி மனுஷனும் இன்று இல்லை.
- தஞ்சை ப்ரகாஷ்
Jandhu/ஜந்து- Pa.Raghavan/பா ராகவன்- PREBOOK
Regular price Rs. 310.00
பா. ராகவனின் புதிய நாவல்
சில குறிப்புகள்
பத்திரிகை உலகம் - பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான்.
ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை. எத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், எக்காலத்துக்கும் பொதுவானவை.
·
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி, இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான காலக்கட்டம், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு மிக முக்கியமான தருணம். அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்ததொரு கட்டமைப்பு, தனது அனைத்து ஆற்றல்களையும் பெருமைகளையும் ஆளுமையையும் உதிர்த்துவிட்டு முற்றிலும் வேறொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியதன் அடிப்படைகளை இந்நாவல் ஆராய்கிறது.
·
ஜந்துவில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் அத்தியாயம்தோறும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். யாருக்குமே உருவம் கிடையாது. குணமோ, குணமற்ற தன்மையோ கிடையாது. பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்றுமே நிகழும்போதே இல்லாமலும் போய்விடுகின்றன. நல்லது-கெட்டது என்ற இருமைக்கு வெளியேதான் அவர்கள் அத்தனை பேருமே உலவுகிறார்கள். பிரளயத்தில் படைப்பனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பின்பு புதையுண்ட நாகரிகத்தின் உயிருள்ள எச்சங்களாக அவர்களேதான் மீண்டெழுந்தும் வருகிறார்கள். எனவே ஒரு தோற்றத்தில் பிரம்மமாகவும் இன்னொரு தோற்றத்தில் கரப்பான்பூச்சியாகவும் காட்சியளிக்கிறார்கள்.
·
ஜந்துவின் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தனிச் சிறுகதை போலவும் மொத்தமாகப் படித்து முடிக்கும்போது ஒரு நாவலாகவும் தோற்றமளிக்கிறது. வாசிக்கும்போது எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் அத்தியாயம்தோறும் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஜந்து ஒரு நகைச்சுவை நாவலல்ல. குரூரங்களின் மீது மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைக்கு அங்கதமே பொருத்தமான ஆயுதம் என்று மௌனமாக இது உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
·
பின்னுரையில் சி. சரவண கார்த்திகேயன்
‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் செயல்படுவது இக்கதையில் ரசிக்க ரசிக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை மிகைச் சம்பவங்களை, மீஆசாமிகளை நம்பகமாகச் சொன்னது ஒரு சாதனைதான்!
ஜந்து - ஒரு நாவல்
ஆசிரியர்: பா. ராகவன்
முகப்பு வடிவமைப்பு: ராஜன் பி.ஆர் / விஜயன்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆகஸ்ட் 2024 வெளியீடு
Zen Kolai Vazhakku/ஜென் கொலை வழக்கு- Pa.Raghavan/பா ராகவன்- PREBOOK
Regular price Rs. 200.00
நவீன நாசகார ஜென் கதைகள்
சில குறிப்புகள்
நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக் குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.
பா. ராகவனின் இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே.
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு.
அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார்.
அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது.
இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.
—
ஜென் கொலை வழக்கு
நவீன நாசகார ஜென் கதைகள்
ஆசிரியர்: பா. ராகவன்
முகப்பு வடிவமைப்பு: விஜயன்
AI கோட்டோவியங்கள்: டேவி. சாம் ஆசீர்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆகஸ்ட் 2024 வெளியீடு
Stay up-to-date about new collections, events, discounts and more