Ayyanar Viswanath

Filter
      திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் ஆகிய முப்பரிமாணப் புனைவுத் தளத்திலும் விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என அ- புனைவுத் தளத்திலும் தனது தனித்துவமான மொழியில் எழுதி வருபவர். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களின் திரைக்கதைகளிலும் இவரது பங்களிப்பு உணடு. 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்து தமிழின் கதை கூறல் மரபை முற்றிலும் மாற்றியமைத்த இவரது ’ஓரிதழ்ப்பூ’ நாவல், கடந்தப் பத்துவருடங்களில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது எனப் பெயர் பெற்றது. சென்ற வருடம் வெளிவந்து மிகப் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்திய ’பழி’ நாவல் அனைத்து தரப்பு வாசக மனங்களிலும் இடம்பெற்றது.

      கடந்த பதிமூன்று வருடங்களாக இணையத்தில் தொடர்ந்து எழுதி- இயங்கி வரும் அய்யனார் விஸ்வநாத் திரளான வாசகர்களைப் பெற்றிருக்கிறார். 2006 ஆம் வருடத்திலிருந்து துபாயில் வசித்து வருகிறார்.


      8 products

      8 products