27 products
27 products
27 products
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்
Regular price Rs. 600.00
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”
-ஆஷிஷ் நந்தி.
”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்
- வி.எஸ்.நய்பால்.
'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'
- சஷி தரூர்
Azhiyadha Regaigal/அழியாத ரேகைகள் -Sudha Murthy/சுதா மூர்த்தி-தமிழில் -Gayathri R/காயத்ரி ஆர்
300
Regular price Rs. 250.00சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது.
என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த அழகான மலர்களைப் போல் இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் நான் மிகவும் போற்றும் அனுபவங்கள். இவை எல்லாவற்றையும் தொடுத்து ஒரு மாலையாக இங்கு கொடுத்திருக்கிறேன்.
தீக்கொன்றை மலரும் பருவம் (Theekondrai Malarum Paruvam) - Abubakar Adam Ibrahim
ZDP91
Regular price Rs. 499.00பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறதென்று உணர்ந்தாள். இருபத்தைந்து வயது ஹஸன் ’ரெஸா, ’ போதைப் பொருள் விற்பனை செய்பவன், உள்ளூர் ரவுடிகளின் தலைவன் , திருடும் பொருட்டு அவளது வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்தபோது, அவள் இதயத்தில் தடம் பதிக்கப் போகிறான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அசாதாரண சூழலில் சந்தித்துக்கொண்ட இருவரும் ரகசிய உறவின் பயணத்தில் திளைத்திருக்கையில், பிந்த்தாவின் செல்வச்செழிப்புடைய மகன் அதை அறிய நேரும்போது, எதிர்பாராத வகையில் அவலமும் துயரமும் ஏற்படுகின்றன.
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.
Author: Abubakar Adam Ibrahim
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 404
Language: Tamil
Engal Nilavin Niram Sivapu/எங்கள் நிலவின் நிறம் சிவப்பு -Rahul Pandita /ராஹுல் பண்டிதா
Regular price Rs. 460.00
Aaviyin Vaadhai/ஆவியின் வாதை -Hasan Azizul Huq/ஹசன் ஆஸிஸுல் ஹக்
400
Regular price Rs. 280.00மாக்பெத் (Macbeth) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP159
Regular price Rs. 350.00ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதால், ‘மாக்பெத்’ என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக, ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது.
ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள், இடர்பாடுகள், இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை, அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு, கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்.
-பேராசிரியர் அ. சீநிவாசராகவன்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 254
Language: Tamil
Mittai kathaigal/மிட்டாய்க் கதைகள் -Khalil Gibran/கலீல் கிப்ரான் -தமிழில் என்.சொக்கன்
Regular price Rs. 110.00
ஹாம்லெட்/Hamlet-William Shakespeare/வில்லியம் ஷேக்ஸ்பியர் -தமிழில் -Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன்
ZDP 181
Regular price Rs. 450.00லியர் அரசன் (King Lear) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP124
Regular price Rs. 420.00தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.
லீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்
சொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.
இத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.
– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 344
Language: Tamil
Rama/ராமன்
Regular price Rs. 90.00
Ennathin Oppatra Sakthi/எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி-BK Shivani/பிகே ஷிவானி
Regular price Rs. 400.00
பல விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொண்டு சோர்வடைகிறீர்களா?
ஏன், எதற்கு, எப்படி, இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால், ஆனால்... என்று குழம்புகிறீர்களா?
அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கு!
*
பிரபல ஆன்மிகவாதியான பிரம்மாகுமாரி ஷிவானி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை அறிந்துகொள்ளும் பாதையில் வழிநடத்தியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சகோதரி ஷிவானி, ‘ஓர் எண்ணம்’ எவ்வாறு நம் உணர்வுகள், மனப்பாங்கு, செயல்கள், பழக்கங்கள் மற்றும் நம் குணாதிசயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது எனத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
எண்ணங்களைச் சீர்படுத்த தியான வர்ணனைகள், சுய பரிசோதனைக் கேள்விகள், ஆளுமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
மனதின் அற்புதத் திறனை வெளிக்கொணர விரும்புபவருக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Yakutsk Kaidhi/ யகுட்ஸ்க் கைதி - Shreyas Bave/ஷ்ரேயாஸ் பவே
Regular price Rs. 520.00
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் இறந்தாரா, மறைந்துபோனாரா? அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் காணாமல் போனதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? சர்வதேச போலீஸிலிருந்து ரஷ்ய உளவுத்துறைவரை இந்த விவகாரத்தில் செய்த திரைமறைவு வேலைகள் என்னென்ன? உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தோண்டித் துருவுவதன் பின்னணி என்ன?
இன்னும் எத்தனை எத்தனையோ திகிலூட்டும் கேள்விகளுக்கான பதில்களை இந்த நாவல் ஒன்றோடொன்று பின்னி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்கிற விறுவிறு நடையில் சொல்கிறது. ஒரு நாட்டின் மாபெரும் தலைவரின் முடிவு மர்மமாக நீடிப்பதை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்தப் புத்தகம். உங்கள் அறிவைச் சீண்டியபடியே எதிர்பாராத சம்பவங்களைக் கோத்து விவரிக்கும் இந்நூல் ஒரு முடிவை நோக்கி உங்களை நகர்த்துகிறது.
Theeramikka Indhiyargal 2/தீரமிக்க இந்தியர்கள் 2-Shiv Aroor/ஷிவ் அரூர் -Rahul Singh/ராஹுல் சிங்
Regular price Rs. 610.00
Ruskin Bond Sirukathaigal - 1/ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-1
Regular price Rs. 660.00
Arupaththu Ezhavadhu Adi/அறுபத்து ஏழாவது அடி- Suresh Raina/சுரேஷ் ரெய்னா/Bharath Sundaresan/பரத் சுந்தரேசன்/Thamaraiselvi/தாமரைச்செல்வி
Regular price Rs. 270.00
Dvijottamar/த்விஜோத்தமர்- V. Balakrishnan/வி பாலகிருஷ்ணன்/தமிழில்-நரசிம்மன்
Regular price Rs. 120.00
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உள்ளூர அவரைக் குத்திக் கொன்றாலும், அந்தத் தலைசிறந்த ஆசான் போர்க்களத்தில் இரண்டு அக்ஷௌஹினி வீரர்களைக் கொன்று குவித்தார். தனது உயிரை தானே துறந்துகொண்ட துரோணரின் உயிரில்லா உடலிலிருந்து தலை திருஷ்டத்யும்னனால் துண்டிக்கப்படுகிறது.
எதிர்காலம், தற்காலத்தைப் போலவும் கடந்தகாலத்தைப் போலவும், வெறுமையாகத்தான் தெரிகிறது. ஒரு சாபம் சபிக்கப்படுகிறது. அமைதிகூட இன்னும் மௌனமாகிறது. இப்படித்தான் பாலா, நம் இதிகாசக் கதைகளுக்குத் தனக்குரிய தனி பாணியில், புதிய ஒரு பரிமாணம் கொடுக்கிறார். அந்த அற்புதமான கதைகளைத் தற்காலத்திற்கேற்ப அழகாக வடிவமைக்கிறார். அவர் எழுத்துகளிலும், தயாரிப்புகளிலும் பெரிய பலமாகத் தென்படும் அந்த “மினிமலிசம்” - மிக எளிமையான நடை. ஆனால், அதில் ஒரு ஆழம், அமைதி. ஆனால் அதில் ஒரு குமுறல். அவரின் படைப்புகளில் அவ்வப்போது தென்படும் கவிதைகளைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதே சமயம், மேடையில் அரங்கேறும் நடனமும் காண அழகாக இருக்கும். இவை அனைத்தையும் விடவும் மிக முக்கியமானது, சமகால இந்திய நாடக உலகில் பாலா ஒரு முக்கியமான நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
சுரேந்திரநாத் சூரி
இயக்குனர், நாடக ஆசிரியர்.
Sigarangalukku Appal/சிகரங்களுக்கு அப்பால்-Dr. Kumaran Rasappan/டாக்டர் குமரன் ராசப்பன்
Regular price Rs. 650.00
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சிகரங்களை நோக்கிய வாழ்நாள் பயணத்தைத் தொடங்கச் செய்தது.
டாக்டர் குமரன் ராசப்பன், பாதுகாப்பாக இருந்த ஒரு சிங்கப்பூர் மாணவனாக இருந்து, பிறகு ஒரு சாகசக்காரராக, மருத்துவராக, மக்கள் நலப் பணியாளராக உருவான அசாதாரணமான பயணத்தின் கதையை விவரித்துச் சொல்கிறார். அந்தப் பாதையில், அவர் மரணங்களைப் பார்க்கிறார், பனிப்புயல்களைச் சந்திக்கிறார், நிலநடுக்கங்களில் தப்பிப் பிழைக்கிறார், இவற்றின் வழியே மனிதர்களின் மன உறுதி, வெற்றி தோல்வி ஆகியவற்றின் இயல்பு, வெவ்வேறு கலாச்சாரங்களின் அழகு ஆகியவற்றைப் பற்றி வியப்பூட்டும் விவரங்களைக் கண்டடைகிறார். அவருடைய பயணம் அவருக்குக் கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம் என்னவெனில் ஒருவரின் வெற்றி, தோல்வியை மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது என்பதே. நாம் ஒவ்வொருவரும் ஏறுவதற்கு நமக்கென்று மலைகள் உண்டு.
***
“மலையேற்றச் சாதனைகள் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பு, ஆனால் அதற்கும் மேலாக, இளைஞர்கள் தங்கள் மனத்தையும் எண்ணங்களையும் ஒரு விஷயத்தில் தீவிரமாகச் செலுத்தினால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒரு உண்மை நிகழ்வு இது.”
- இந்திராணி ராஜா
அமைச்சர், பிரதம மந்திரியின் அமைச்சகம்
நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர்
சிண்டா அமைப்பின் தலைவர்
சிங்கப்பூர்
Thirupati/ திருப்பதி
Regular price Rs. 99.00
கிருஷ்ண அவதாரத்துக்குப் பிறகு விஷ்ணு வைகுண்டம் திரும்பினார். பூலோகத்தைப் பற்றிய கவலை பிரம்மாவிற்கு வந்தது. விஷ்ணு இல்லாமல் குழப்பம் உருவாகும் என்று பயந்தார். அதனால் அவரும் அவர் மகனான நாரதரும் விஷ்ணுவை பூலோகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.
பேசும் புற்று, கர்வம் கொண்ட முனிவர், கோபமான இடையன், அசுர அரசன் ராவணன் என்ற இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம், திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி கோயில் எப்படித் தோன்றியது என்ற இந்தக் கதைகளில்வலம் வருகின்றனர். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடேஸ்வரரின் கோயில் உலகத்தின் அழகான கோயில்களில் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு நளைக்கு 50000 மக்கள் தங்கள் பாவங்களைப் போக்க இங்கே வருவதாகக் கூறப்படுகிறது.
Thairiyathai Pesum Kathaigal/தைரியத்தைப் பேசும் கதைகள்
Regular price Rs. 99.00
எண்ணிக்கையில் பலம் உண்டு எண்கிறது விவேகமான பன்றி. நேர்மையும் தன்னலமற்ற குணமும் தலையெழுத்தையே மாற்றும் என்கிறது குட்டி மான். நண்பன்தான் உன் புதையல் என்று ஆலோசனை சொல்கிறது நண்டு. அன்னத்துக்கோ விசுவாசம்தான் மிக முக்கியமான குணம். ஆனால் இவையனைத்தோடும் தைரியமும் சேர்ந்ததால் எப்படி இந்த விலங்குகளுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைத்தது என்று சொல்கின்றன இக்கதைகள்.
Mahabharatham/மஹாபாரதம்
Regular price Rs. 99.00
குடும்பத்தினுள் ஒரு சின்னப் பொறாமையால் ஆரம்பித்தது இக்காவியம்.
கௌரவர்கள் தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான பாண்டவர்களை சூழ்ச்சி செய்து ராஜ்ஜியத்தைவிட்டு வெளியில் அனுப்பினர். பகவான் கிருஷ்ணரால்
கூட அடுத்து வந்த பிரச்சனைகளைத் தடுக்க முடியவில்லை. வேத வியாசர்
இந்தக் காவியத்தைக் கவிதையாக எழுதியிருக்கிறார். இக்கவிதை
உலகிலேயே நீளமான கவிதையாகும். இக்காப்பியத்தின் மூலம் வேத வியாசர், மனித உறவுகள், பூசல்கள், லட்சியங்கள் மூலம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய விழைகிறார்.
Subash Chandra Bose/சுபாஷ் சந்திர போஸ்
Regular price Rs. 99.00
‘ஜெய் ஹிந்த்’ என்ற சுபாஷ் சந்திர போஸின் முழக்கம் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஜப்பானில் இருக்கும் இந்திய போர்க் கைதிகளும் இந்தியாவில் சுதந்திரத்தை நாடிய இளைஞர்களும் இவருடன் சேர்ந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்த சுபாஷ் ஒரு நல்ல தலைவராக விளங்கினார்.
Kaakkaigalum Aandhaigalum/காக்கைகளும் ஆந்தைகளும்
Regular price Rs. 99.00
பண்டிட் விஷ்ணு ஷர்மா கற்றுக் கொடுக்க புது வழி ஒன்றைக் கண்டுபிடித்தார். அது பஞ்சதந்திரக் கதைகள். தன் மாணவர்களுக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கதைகளின் மூலம் கற்றுக் கொடுத்தார். இவை எல்லோரும் ரசித்துப் படிக்கும்படியும் அமைந்தன. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும், பல்வேறு மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் இன்னும் இக்கதைகள் படிக்கப்பட்டு வருகின்றன. மனிதனின் முட்டாள்தனத்தையும் இரக்கமற்ற குணத்தையும் இக்கதைகள் வெளிச்சம்போட்டு காட்டுவது மட்டுமல்லாமல் ‘நண்பர்களைப் பார்த்துத தேர்ந்தெடு’ என்பது போன்ற சில அறிவுரைகளையும் வழங்குகிறது.
Therthal Kadahigal/தேர்தல் கதைகள்-Alok Shukla/அலோக் சுக்லா
Regular price Rs. 200.00
சுதந்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம்.
உங்கள் ஆர்வத்தை ஈர்த்துப்பிடிக்கும் சிறுகதைகளின் இந்தத் தொகுதி வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தியாவின் தேர்தல் அரசியலில் நம்பமுடியாத நிகழ்வு என்பது மக்களை வீடுவீடாக சென்று சந்திப்பது. நூற்றாண்டுகளாக அந்நியர்களிடம் அடைமைப்பட்டுக் கிடந்த, ஏழ்மையான, வளரும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி. அது ஒரு அற்புதத்திற்கு இணையானது.
எழுபத்தைந்து சுதந்திர வாழ்க்கையைக் கடந்துவிட்டோம். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அந்த சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை. தேர்தல் நடைமுறை என்பது மனிதனின் சுவாசத்தைப்போல வாழ்வின் ஒரு அங்கம். சுதந்திரமான, சமத்துவமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்பு தனிப்பட்ட செயலதிகாரத்தை உறுதி செய்திருந்தும், இந்தியாவின் நீதி அமைப்புகள் அதில் தலையிட உரிமையில்லாதிருந்தும், தேர்தலை நடத்துவதற்கு எண்ணற்ற சவால்களை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது என்பதை ஒரு சிலர் அறிவார்கள்.
இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும்போது நிகழும் நிகழ்வுகளில் நம்மால் கொண்டாடப்படாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களின் பணிக்குப் பின்னே மறைந்து கிடக்கும் காட்சிகளையும் அவர்கள் சந்திக்கும் உன்னதமான சவால்களையும் இந்தப் புத்தகம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக் கதைகள் சாதாரண மக்களின் கதைகள். அவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய தேர்தல் ஆணைய பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நம்புவதற்கரிய தைரியத்தை வெளிப்படுத்தியும் உலகின் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான தேர்தலான இந்தியத் தேர்தல் செயல்பாட்டுக்கான தூண்டுகோலாகவும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகள்.
மனிதனின் சுதந்திரத்துக்கான முடிவற்ற தேடலில் மனிதகுல எழுச்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறது இப்புத்தகம்.
Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2
Regular price Rs. 560.00
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
Peralaiyaanen/பேரலையானேன்-Githa Hariharan/கீதா ஹரிஹரன்/A. Mangai/அ. மங்கை
Regular price Rs. 430.00
Karuppu vilakkuth theru/கறுப்பு விளக்குத் தெரு -Chika Unigwe/சிகா உனிக்வே
Regular price Rs. 470.00
இதெப்படி இருக்கு ? (Itheppadi Iruku?) - Greenstone Lobo
ZDP32
Regular price Rs. 400.002019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?
கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா?
கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா?
விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்
ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்
முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால்,
எதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள
முடியுமா?
அறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன
ஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று
உறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்
ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்
கணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட
பலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
ஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய
விளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,
உலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
இந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்
பற்றி சொல்ல லோபோ ரெடி! கேட்க நீங்கள் ரெடியா?
Author: Greenstone Lobo
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 292
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more