Usha Subramanian Kuru Novelgal/உஷா சுப்ரமணியன் குறு நாவல்கள்
Regular priceRs. 350.00
/
எல்லாருமே 'எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!' என்று சொல்லிக் கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷாசுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல. ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. 'அவர் நன்றாக எழுதுவார்' என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை 'விகடனி'ல் அறிமுகம் செய்து வைத்தேன். முதல் சிறுகதையே மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்துகொண்டேன் - அவர் முறைப்படி 'ஜர்னலிஸம்' படித்துப் பட்டம் பெற்றவர் என்று! உஷாவின் எழுத்துகளில் ஒரு தனியான துணிச்சல் இருக்கும். கருத்துகளைத் தைரியமாக எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டார். புதுமைப் பெண்ணாக வாழவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு நிறைய உண்டு. அது அவருடைய பேச்சிலும் வெளிப்படும். எழுத்திலும் 'பளிச்'சென்று இருக்கும்! 'மனிதன் தீவல்ல' - என்ற அவருடைய குறுநாவலின் 'தீம்' அப்படிப்பட்டது. ஆனால் அதை வெகு நயமாக, அருமையாக எழுதி இருந்தார். அதை நான் பல தடவைகள் படித்திருக்கிறேன். 'இதயம் பேசுகிறது' இதழில் அவர் தொடர்கதை எழுதி இருக்கிறார். 'கண்ணீர்ப் பூக்கள்' என்ற தலைப்பில் அவர் ஓர் உண்மைக் கதையை ரொம்ப உருக்கமாக எழுதி இருக்கிறார். அவருடைய எழுத்தில் ஒரு தனித்தன்மை உண்டு. கதையானாலும், கட்டுரையானாலும், போட்டியானாலும் அது தெரியும். - மணியன்
Usha Subramanian Kathaigal/உஷா சுப்பிரமணியன் கதைகள்
Regular priceRs. 590.00
/
உஷா பல விஷயங்களில், ஒரு முன்னோடி எழுத்தாளர். தீவிரமான விஷய உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பாசாங்கற்று எழுதுவதில், அவர், அவருக்குப் பின்னால் வந்த பலருக்கும் வழி காட்டியவர். தமிழ் இலக்கியச் சூழலில், உண்மைகளை உரமாகச் சொல்வதே மங்கிக் கொண்டு வரும் நேரம் இது. இதை, உஷாவோடு சக பயணியாக, நடந்து கொண்டிருக்கும் நானாவது சொல்லியாக வேண்டும். அவருடைய பல கதைகள், அவை வெளிவந்த காலத்தில் பலத்த சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் ஆளானதை இன்று பலர் அறிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனக்கென்று ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டே அதில் நடந்தவர் அவர். இன்னொருவர் தடத்தில் அவர் நடந்தவர் இல்லை. எழுதுவதில் அவருக்கு இருந்த ஈடுபாடு, தவிர, தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் எந்த முயற்சியையும் அவர் மேற்கொண்டதும் இல்லை. தமிழ் எழுத்துச் சூழலில், ஒரு அபூர்வமான மனிதர் அவர்.
உஷா சுப்பிரமணியன் அவர்களின் கடந்த முப்பது ஆண்டுகளின் இலக்கிய விளைச்சலை இத்தொகுப்பு உணர்த்தும். இவைகள் பிறந்து, பிரசுரமான காலத்தில் தோற்றுவித்த அதே உணர்வை, திருப்தியை இன்னும், இப்போது வாசிக்கும் போதும் தருகின்றன என்பதே, கதைகளாக இவை பெற்ற வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு நிற்கின்றன.