Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி -Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
எமோஷனல் இன்டெலிஜென்ஸ், பங்குச் சந்தை, நிதி நிர்வாகம், மேலாண்மை போன்றவை குறித்து 90க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ள முனைவர் சோம வள்ளியப்பன் சிறுகதைகளும் நாவலும் எழுதியுள்ளார். ஜெமினி சர்க்கிள் என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக, கம்பம் பாரதி கலை இலக்கியப் பேரவையின் முதல் பரிசு பெற்றிருக்கிறார். இவரது முதல் நாவலான திட்டம் 6 மிக முக்கியமான நாவல் என்று நாவல் ஆசிரியர்கள் சு வேணுகோபால் மற்றும் பாவண்ணன் பாராட்டுகிறார்கள்.
சோம வள்ளியப்பன் கவிதைகளும் எழுதி இருக்கிறார். தொகுப்பில் உள்ளவை சிறிதும் சலிப்புத் தராத நடை. சுவாரஸ்யம், இயல்புத் தன்மை கொண்டவை என்றும், “நம்மோடு இருந்து, நம்மைப் பற்றி யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று எண்ண வைக்கும் இயல்புத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. படிப்பவர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்கும் அனுபவம் கிடைக்கும்” என்றும் கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பாராட்டுகிறார்.
ஒவ்வொரு கவிதையும் எப்போது எழுதப்பட்டது, அந்தக் காலகட்டம், அப்போது இருந்த எண்ணம் போன்றவற்றையும் குறிப்புகளாகக் கொடுத்திருப்பது, ஒரு காலத்தில் இளைஞர்கள் எப்படி சிந்தித்தார்கள், எவை குறித்து கவலை கொண்டார்கள் என்பதையெல்லாம் காட்டுவதாக இருப்பது, புத்தகத்தின் கூடுதல் சிறப்பு.
அந்த விதத்தில் இது ஒரு கவிதைகள் மட்டுமே உள்ள புத்தகமல்ல; கவிதைகளைத் தேடிப் படிக்காதவர்களையும் ஈர்க்கக்கூடிய புத்தகம்!
- Poetry
- ZDP Specifics
- Tamil