Nangam Thotta/நான்காம் தோட்டா - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்த நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை, அவற்றின் அபத்தங்களை, பாசாங்குகளை, அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை, அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பதை உடலின் நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக இந்தப் புனைவுகளில் பிரம்மாண்டம் கொள்கிறது. ‘மியாவ்’ என்ற யோனிக் குரல் இக்கதைகளின் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
*
“‘நான்காம் தோட்டா' துப்பறியும் கதையாக தோற்றம் கொண்டாலும் ஏன் எனும் கடினமான கேள்வியை எழுப்புவதுடன் முடிகிறது. மரணத்தின் வழி தன் மகாத்மாத்துவத்திற்கு நியாயம் சேர்த்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். துருவமயமாதலும் மதவாதமும் காந்தியின் உயிரைக் காவு வாங்கியது என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும் கதை. காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வைக் காட்டிலும் பெரும் செய்தியாக ஆகிவிட்ட காலகட்டத்தின் எதிரொலிப்பு இது.”
- சுனில் கிருஷ்ணன்
- Short Stories
- Ezutthu Prachuram
- Tamil
