4 products
Megangalin Pethi/மேகங்களின் பேத்தி - Seenu Ramasamy/சீனு ராமசாமி
Regular price Rs. 210.00
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்ல கவிதை, தன்னை வாசிப்பவர்களை, அவர்களது வழக்கமான இடத்திலிருந்து நகர்த்திச் செல்கிறது. அவர்கள் இருளில் இருந்தால், ஒளியை நோக்கியும், அவர்கள் சந்தடியிலிருந்தால் விசாலமான - காற்றோட்டமான இடம் நோக்கியும் நகர்த்துபவை. சீனு ராமாசாமியின் கவிதையோடு நகர்பவர்கள் ஒரு நாகரிக சமூகத்துக்கு இடம் பெயர்கிறார்கள். முந்தைய அவரது தொகுப்புகள்போலவே, ‘மேகங்களின் பேத்தி' தொகுப்பின் கவிதைகளும் செயல்படுகின்றன.
- கவிஞர் கரிகாலன்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை நிலைப்படுத்திக்கொண்டவர் சீனு ராமசாமி. ‘ஆக் ஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதிப்படி செயல், நடவடிக்கை, நடிப்பு என்ற பொருள்கள்தான் உண்டு. ஆனால், திரையகராதியில் அடிதடி, அதிரடி என்ற அர்த்தங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த இலக்கணத்துக்கு அடங்க மறுத்து, அமைதியான நீரோட்டத்தின் பேரலைகளை உணரச் செய்யும் படங்கள் சந்தையிலும் வெற்றி காண முடியுமெனச் செய்துகாட்டிய முதன்மை இயக்குநர்களில் ஒருவர் இவர். அந்த நீரோட்டத்துக்கே உரிய சில்லென்ற புத்துணர்ச்சியை, புதிரான ஆழத்தைத் துய்ப்பதற்கு இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் பாதையமைக்கிறது.
- அ. குமரேசன்,
மேனாள் பொறுப்பாசிரியர், தீக்கதிர் நாளிதழ்
Salam/சலம்-Pa.Raghavan/பா.ராகவன்- Paperback
Regular price Rs. 1,000.00
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.
இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.
Salam/சலம்-Pa.Raghavan/பா.ராகவன்- Hardcover
Regular price Rs. 1,200.00
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.
இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.
IIT Dreams- Prabhu Bala
Regular price Rs. 120.00
“Dreaming of joining an IIT? This book is your step-by-step guide to cracking the JEE exams.
Although fewer than 500 students from Tamil Nadu make it to IITs each year, success isn’t about privilege—it’s about persistence. With practical tips and proven strategies, this book shows how anyone can achieve their IIT dream.”
Stay up-to-date about new collections, events, discounts and more