
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
/
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
- ந. முருகேசபாண்டியன்
Get Flat 15% off at checkout