569 products
569 products
569 products
Rasavaadham/ரசவாதம்-Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 300.00
Durogan/துரோகன்-Kesananthan Agaran/கேசநந்தன் அகரன்
Regular price Rs. 160.00
அகரனுடைய எழுத்தின் சிறப்புகளாக சிலவற்றைச் சொல்லலாம்:
தனித்துவமான சொற்கள்; நூதனமான உவமைகள்; விசித்திரமான, கறுப்பு நகைச்சுவை. ஆரம்ப எழுத்தாளர் என்ற தடயமேயற்ற முதிர்ந்த நடை.
போர்ச்சூழல் கதைகள், உளவியல் ஆழம் கொண்டவை, அறிவியல் புனைவு என பல்வேறு வகைமைகள்.
வேளையின் புதிர்களைப் பேசும் கையறுநிலைக் கதைகள். வெளிப்படையாக அரசியலை முன்னிறுத்தாதவை. சொந்த மண்ணில் நிகழ்பவையும் சரி, அந்நிய தேசத்தில் நடப்பவையும் சரி, தீனர்களின் வாதையைப் பேசுகிறவை.
சித்திரங்களின் நுட்பம்வழி நகரும் கதைகள் சில. உணர்ச்சிகளைக் கிளர்த்தி நகர்கிறவை சில. அபுனைவின் சாயல் கொண்டவை ஓரிரண்டு.
சில கதைகள், வாசிக்கும் மனத்தில் பதற்றமூட்டுபவை; அதனாலேயே நிறைவையும் அளிப்பவை. கலையில் பெருகும் துயரம்தான் வாசக மனத்துக்கு எத்தகைய ஆசுவாசத்தை, இன்பத்தை அளிக்கிறது...!
புலம்பெயர் இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத பெயர்களில் ஒன்றாக கேசநந்தன் அகரன் உருவெடுக்கும் காலத்தை முன்னுணர்த்தும் தொகுப்பு இது...
- யுவன் சந்திரசேகர்
Veliaatkkal/வெளியாட்கள்-S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்
Regular price Rs. 250.00
வீட்டுக்கு வரும் வெளியாட்கள் தண்டபாணியிடம் கணக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு நேராக மாடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கண்ணாடியின் முன் நின்று தலை வாருவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறவர்களும் வாரத்திற்கு ஒரு நாள் வருகிறவர்களும் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறவர்களும் தலைசீவிக் கொள்ளாமல் சென்றதில்லை. அவர்கள் தலைசீவிக் கொள்வதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள் என்று தோன்றும். நீலநிறச் சீப்பைக் கையில் பிடித்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பழைய ஞாபகம் ஒன்றைத் தங்களது தலைமுடியின் வழியாகப் பார்ப்பதைப் போல கூர்ந்து நோக்கிய படி தலைவாருவார்கள். யாராவது பெண் வந்து தனது வீட்டில் தலைவாருகிறாளா, ஜடை போட்டுக் கொள்கிறாளா, ஆண்கள் மட்டும் வீட்டிற்கு வருகிறார்கள் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தனக்கும் தண்டபாணிக்கும் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டுந்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள், அதுவும் அவள் கொண்டுவந்த சீப்பில் தலைவாரிக் கொண்டாள் என்பதை நினைத்தபோது அவளுக்கு வேதனையாக இருந்தது.
Oru Claustrophobic Pennum Carlos Endru Peyaridapatta Nathaiyum/ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 120.00
“நினைப்பது கமலியா, கார்த்திகாவா? கமலிக்கா
En Thalaikkul Oru Kadal Irukkiradhu/என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 90.00
கார்த்திகாவின் கவிதைகள், கருத்தும் அனுபவமும் முயங்கும் புள்ளியைத் தேடி நகர்கிறவை. காட்சிகளும் அவற்றைப் பற்றிய சிந்தனையோட்டமும் இரண்டறப் பிணைந்திருப்பவை. நனவும் பிரமையும் உருவக மொழியில் பரிவர்த்தனை கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஓவியம்போன்ற துல்லியம் கொண்ட காட்சிகளை முன்னிருத்தி, உணர்வுவீச்சுகளைப் பதிவுசெய்ய முனைகிறவை.
நவீன உலகின் பொருட்களும், நபர்களும், இடங்களும், உணர்வுகளும் சரளமாக வந்துசெல்லும் கவியுலகம் இவருடையது. தட்டி ஆச்சியும் வான்காவும் காளியும் சிந்திக்கும் ஊசியும் இயல்பாக இடம்பெறும் உலகம். ரப்பா நூயியும், டென்னிஸ் வீரர்களும், சாம்பாரில் ஊறிய பூரியும் நிரம்பியிருக்கும் நூதன உலகம்.
இறுக்கமேயற்ற மொழியில், புகாரற்ற தொனியில், அன்றாடத்தின் மறைபுலத்தைத் தெளிவித்துக்கொள்ள முற்படும் கவிதைகள். துளியும் அவநம்பிக்கையோ புலம்பலோ தொனிக்காதவை. அதற்காக, செயற்கையான நம்பிக்கையை, உற்சாகத்தை ஊட்டுவதுமில்லை.
இடங்களும் காலமும் விளிம்புகளின்றிப் பரந்திருக்கும் கவிதைவெளியில், உருவகங்கள், பிரமைகள்வழி சாதாரணக் காட்சிகள் கூர்மை கொள்கின்றன. தினசரியின் அலகுகளை புனைவின் களத்தில் நிறுத்திக் கையாளும் கவிதைகள் இவை.
- யுவன் சந்திரசேகர்
Kanai Yevu Kaalam/கணை ஏவு காலம்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னை சார்ந்து தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான ஆவணமாகக் கருதப்படுவது, பா. ராகவனின் ‘நிலமெல்லாம் ரத்தம்’. பாலஸ்தீன் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்பற்று ஆராயும் அந்த வரலாற்றுப் பிரதியின் இரண்டாம் பாகம் இது.
நிலமெல்லாம் ரத்தம், கிபி இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்க காலச் சம்பவங்களுடன் நிறைவு பெறும். இந்நூல், இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கும் காலம் வரையிலான சரித்திரத்தின் அரசியல் பின்புலத்தை அலசுகிறது.
யாசிர் அர்ஃபாத், ஷேக் அகமது யாசின் என்கிற இரு பெரும் பாலஸ்தீனியத் தலைவர்களும் காலமானபின்பு அம்மண்ணின் விடுதலைப் போராட்டமும் அரசியலும் வேறு வண்ணம் கொண்டதன் ஆதாரச் சிக்கல்களைப் பட்டியலிட்டு, இது இன்னமும் தீர்வை நோக்கி முன்னகர முடியாமல் இருப்பதன் காரணங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறார் பாரா.
Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ, தத்துவப் பிரதியோ, புனைகதையோ இல்லை.
தனது மிகச் சிறு வயதுகளில், மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில், விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய கடவுளைப் பிறகு திகைப்பு அகற்றி நெருங்கிப் பார்க்க முயற்சி செய்த அனுபவங்களைப் பாரா எழுதியிருக்கிறார்.
உருவங்களிலிருந்து கருத்தாக்கம் என்பது மிக நீண்ட, அபாயங்கள் மிகுந்த அகப்பயணம். அப்பயணத்தில் கண்டடைந்த அனைத்தையும் ஆசிரியர் அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இன்றி அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் இந்தப் புத்தகம் ஒரு முன்மாதிரி.
Paravai Yudham/பறவை யுத்தம் -பா.ராகவன் /Pa.Raghavan
Regular price Rs. 160.00
இந்தத் தொகுப்பின் முதல் பதிப்பு 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தப் பதிப்பு.
ஒரு பதிப்பே காணாமல் போய் கால் நூற்றாண்டுக்குப் பிறகு திரும்பக் கிடைத்த கதை, இத்தொகுப்பில் இல்லாத - ஆனால் இருந்திருக்க நியாயமுள்ள கதை.
Maadheeswari/மாதீஸ்வரி- Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 290.00
ஷாராஜின் ‘துலுக்குவார்பட்டி ட்ரையாலஜி’ என்னும் மும்மை நாவல்களில் முதலாவது பெருந்தொற்று. இரண்டாவது இந்த மாதீஸ்வரி.
ராணுவ ஒழுங்கு போன்ற கட்டுப்பாட்டில் ஊரை நிர்வகித்து வந்தவர், முன்னாள் ஊர்த் தலைவரான மிராசுதார் சென்ராயன். அவரது மரணத்துக்குப் பிறகு அவரின் விதவையான மாதீஸ்வரி, பிற மிராசுதார்கள், பண்ணையார்களின் எதிர்ப்புக்கிடையே ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், கல்வியறிவற்றோர், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இந்நிலையில் அவளது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத அசம்பாவிதங்களாலும், அதன் பின்விளைவுகளாலும் குடும்பம் சிதைந்து, ஊரும் பாதிக்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் அவள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, ஒரு வார காலத்தில் இன்னும் சில எதிர்பாராத சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்தப் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தை முன்னிட்டு மாதீஸ்வரி, அவளின் இளைய மகன், பேரன் ஆகியோருக்கிடையே நிகழும் பாசப் போராட்டம் இந்த நாவல்.
Andhi Vaanin Ayiram Velli/அந்தி வானின் ஆயிரம் வெள்ளி- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 120.00
நடுநிசியில் ஏதோ ஒரு பெரிய சுரங்கப்பாதைக்குள் புதைந்துபோய்ச் சிக்குவதை போன்ற கனவுகள் இப்போது எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு உருவகத்தை என்னால் அந்த கனவில் இருந்து மொழிபெயர்த்துக்கொள்ள இயல்கிறது. அப்படி திடுக்கிடும் நேரங்களில் எல்லாம் நான் என் மனதில் தேங்கிக் கிடக்கும் அன்பானவர்களின் முகங்களை நினைவில் இருத்திக் கொள்கிறேன். அது எனக்கு பெரிய பாரமில்லாமல் போகச் செய்கிறது. இத்தொகுப்பில் இருக்கிற அந்தக் கதைகள் எல்லாமே அந்த முகங்களின் பிரதிபலிப்புதான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு பெண் எழுதும் பொழுது எப்போதுமே ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது - இது அவருடைய உண்மையான வாழ்வில் நிகழ்ந்ததா இல்லையா என்ற பெரும் கேள்வி வாசிக்கும் பலருக்கு இருந்தே வருகிறது. ஆமாம். இவற்றில் நிறைய கதைகள் என் வாழ்க்கையில் நடந்த கதைகள்தான் நான் இல்லை என்று மறுக்கவே இயலாது. ஆனால் அவை முழுவதுமாக என் வாழ்க்கையா என்றால் நிச்சயமாக அல்ல. என்னால் ஒவ்வொரு முகங்களின் பின்னால் இருக்கும் மனங்களுள் பிரயாணிக்க முடிகிறது. அதுதான் ஒரு எழுத்தாளருக்கான சவாலாக பார்க்கிறேன். அப்படி பிரயாணிக்கையில் சில முகங்களின் சாயல்கள் ஒன்றுபட்டு இருப்பதை நான் பல காலமாக புலனாய்வு செய்தே வந்திருக்கிறேன்
Pulli Vandugal Prasavikkadha Kaalam/புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்- P. Kalimuthu/ப. காளிமுத்து
Regular price Rs. 120.00
இன்மையின் அதீத உருவழிதல், விளிம்பு வாழ்வின் சிதிலங்களில் இருந்து தன் மொழிக்கு சாரங்களைப் பெற்றுக் கொள்பவராக, பிரதேச அழகியல் மிளிரும் சொற்களைத் தனது கவிதைகளில் மிகச் சாவகாசமாகக் கையாளும் ஒருவராக இந்தத் தொகுப்பின் வழி தனது புதிய அடையாளங்களுடன் வெளிப்பட்டிருக்கிறார் கவிஞர் காளிமுத்து
மொழிக்குள் விரும்பி ஒளிந்து கொள்ளும் தன்மை அதன் அடர்வில் புதிர்த்தன்மையை ஏற்றி விடுகிறது. வாழ்வில் வெதுவெதுப்பான தண்ணீரை, ஒரு முன்மதிய நேரத்து நிழலை உவமையாக்குவது மாதிரி அதிகப் பிரயத்தனங்களற்ற ஒரு தனி நடையை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
- நேசமித்ரன்
Claude Monetyin Marathadi Pen/களாட் மோனெயின் மரத்தடிப் பெண்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 70.00
நாம் விழித்துக்கொள்ள விரும்பாத கனவொன்றை இக்கவிதைகளால் உருவாக்கி அளித்திருக்கிறார் கார்த்திகா. இங்கே பரபரப்பான மாநகரச் சாலையொன்றின் நடுவே ஒரு சிறிய நீரோடை உலகை சிருஷ்டிக்கிறார். ஓடை போல முன்னோக்கியே ஓடும் காலம், ஊஞ்சல்போல பின்னோக்கியும் வந்தால் என்ன என ஏங்குகிறார். தன் கவிதைகள் மூலம் அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார். கடந்த காலத்தின் திரும்ப முடியாத உலகங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நாம் சாதாரணமாகத் தவறவிடும் உலகங்களையும், தருணங்களையும் தன் கவிதைகளில் உறைய வைத்து விடுகிறார்.
சக மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆமவடைகளையும் பரிவுடன் பார்க்கும் தருணங்கள் வழியாக சாதாரண உலகத்தின் பின்னாலிருக்கும் அதிசாதாரண உலகுக்கு ஒரு பிடி கிடைக்கிறது.
ஆமவடைகளைப் போல அரிய, பரிபூரணமான, எளிய, சின்னஞ்சிறு கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பு படிக்கத் திகட்டுவதில்லை.
- முகுந்த் நாகராஜன்
London Diary/லண்டன் டைரி -Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 200.00
Arpa Vishayam/அற்ப விஷயம்- Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 280.00
எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும் விநியோகிக்க முந்தாநாள் போட்ட இனிப்பும் வாங்கப் பக்கத்து ஹோட்டலுக்கு நடக்கும்போது மனசை அலைக்கழிக்கும் விஷயம், பெயர் வைப்பது. நம்முடைய இலக்கிய, சமூக, அரசியல் சார்புகளின் பின்னணியில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கயல்விழியும், கல்பனாவும், ஜீவபாரதியும் சகலராலும் நிராகரிக்கப்பட, பிறந்திருக்கிற குழந்தை ஸ்வப்னா ஆகிறது. சந்தோஷ் ஆகிறது.
Raayar Coffee Club/ராயர் காப்பி கிளப்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 350.00
விடியோ பஸ் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.
விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.
தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.
எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.
பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.
Pagal Iravugalai Kondu Varugira Paravai/பகல் இரவுகளைக் கொண்டுவருகிற பறவை-Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 320.00
2004-ல் வெளியான ஷாராஜின் வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, அதன் மெல்லியல் கதைகளுக்காக சக இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் சிலரின் விருப்பங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அக் கதைகளை இன்னமும் நினைவுகூர்ந்து சிலாகிக்கும் சிலர் அதன் மறுபதிப்பைக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவிப்பார்கள். அதற்கிணங்க, அத் தொகுப்பில் உள்ள பத்து கதைகளோடு, இடைக் காலத்திலும் கடந்த ஓரிரு வருடங்களிலும் எழுதிய, இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத சில புதிய கதைகளும், ஐந்து நையாண்டிக் கதைகளும் சேர்த்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
Vada Korea Private Limited/வட கொரியா பிரைவேட் லிமிடெட்- Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 650.00
சர்வாதிகாரம். பஞ்சம்.
பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர
வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை
முற்றிலும் விலக்கி, வட கொரியாவின்
அத்தனைக் குற்றச் செயல்பாடுகளின் பின்னணியையும் ஆதாரபூர்வமாக
ஆராய்கிறது இந்நூல்.
கிம் ஜாங் உன் என்கிற மனிதர் எப்படி உருவானார்? அவரது தாத்தாவும் தந்தையும் வகுத்த
சர்வாதிகாரப் பாதையை
எவ்வாறு அவர் நவீனமாக்கினார்?
எப்படி அவரால் அமெரிக்காவின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிவைக்க முடிகிறது?
சோற்றுக்கே வழியில்லாத ஒரு நாடு
எப்படி அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது? ஏவுகணைகளைச் செலுத்துகிறது?
இது ஒரு மர்ம தேசத்தின் சோக வரலாறல்ல. எழுபத்தாறு ஆண்டுகளில் ஒரு நிலமே இறுகி
வெடி குண்டாக உருமாறியிருக்கும்
அபாயத்தின் சரித்திரம்.
AI Or Eliya Arimugam/ஏஐ ஓர் எளிய அறிமுகம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 370.00
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்று நோக்கில் விவரிப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் விளக்கும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
செயற்கை நுண்ணறிவு கல்வித்துறை துவங்கி காவல்துறை, சட்டம், உளவியல், அகழ்வு, வங்கிச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி பயன்படுகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. துறை தோறும் ஏஐ நுட்பத்தை விவரிப்பதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வரலாற்று நோக்கிலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது. இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் இதழ் மற்றும் தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Paarka Marutha Paravaigal/பார்க்க மறுத்த பறவைகள்-சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian
Regular price Rs. 200.00
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.”
- அசோகமித்திரன்
Dvijottamar/த்விஜோத்தமர்- V. Balakrishnan/வி பாலகிருஷ்ணன்/தமிழில்-நரசிம்மன்
Regular price Rs. 120.00
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உள்ளூர அவரைக் குத்திக் கொன்றாலும், அந்தத் தலைசிறந்த ஆசான் போர்க்களத்தில் இரண்டு அக்ஷௌஹினி வீரர்களைக் கொன்று குவித்தார். தனது உயிரை தானே துறந்துகொண்ட துரோணரின் உயிரில்லா உடலிலிருந்து தலை திருஷ்டத்யும்னனால் துண்டிக்கப்படுகிறது.
எதிர்காலம், தற்காலத்தைப் போலவும் கடந்தகாலத்தைப் போலவும், வெறுமையாகத்தான் தெரிகிறது. ஒரு சாபம் சபிக்கப்படுகிறது. அமைதிகூட இன்னும் மௌனமாகிறது. இப்படித்தான் பாலா, நம் இதிகாசக் கதைகளுக்குத் தனக்குரிய தனி பாணியில், புதிய ஒரு பரிமாணம் கொடுக்கிறார். அந்த அற்புதமான கதைகளைத் தற்காலத்திற்கேற்ப அழகாக வடிவமைக்கிறார். அவர் எழுத்துகளிலும், தயாரிப்புகளிலும் பெரிய பலமாகத் தென்படும் அந்த “மினிமலிசம்” - மிக எளிமையான நடை. ஆனால், அதில் ஒரு ஆழம், அமைதி. ஆனால் அதில் ஒரு குமுறல். அவரின் படைப்புகளில் அவ்வப்போது தென்படும் கவிதைகளைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதே சமயம், மேடையில் அரங்கேறும் நடனமும் காண அழகாக இருக்கும். இவை அனைத்தையும் விடவும் மிக முக்கியமானது, சமகால இந்திய நாடக உலகில் பாலா ஒரு முக்கியமான நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
சுரேந்திரநாத் சூரி
இயக்குனர், நாடக ஆசிரியர்.
Vaidheeswaran Kathaigal Muzhu Thoguppu/வைதீஸ்வரன் கதைகள் முழு தொகுப்பு - Vaidheeswaran/வைதீஸ்வரன்
Regular price Rs. 500.00
1935ஆம் ஆண்டு பிறந்த எஸ்.வைதீஸ்வரன், நவீனச் சிற்றிதழ் இலக்கியத்தின் முன்னோடியான ‘எழுத்து’வில் தமது தடத்தைப் பதிக்கத் தொடங்கி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகளில் மட்டும் அல்லாமல் சிறுகதைகளிலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் இன்றுவரை இயங்கிவருபவர்.
தமக்குள் ஒரு ஓவியத்தின் வண்ணக் கலவைகளையும், கவிதையின் படிம மொழியையும், நிதர்சன வாழ்வியல் தரிசனத்தையும், கண்ணுக்குப் புலப்படாத ஒரு தத்துவத் தேடலையும் அவரது ஒவ்வொரு சிறுகதையும் உள்ளடக்கி இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒரு நீண்ட ஆயுட்காலத்தின் வாழ்வனுபவங்களை நுண்மையான மனிதநேயப் பார்வையுடன், வாழ்வைப் பற்றிய ஆழ்ந்த தரிசனங்களை உணர்த்தக்கூடிய சாத்தி யங்கள் கொண்டிருப்பவையாக அமைந்துள்ளன.
Karamundar Voodu/கரமுண்டார் வூடு- Thanjai Prakash/தஞ்சை ப்ரகாஷ்
Regular price Rs. 420.00
இந்த எனது கரமுண்டார் வூடு நாவல், எனது கண்டுபிடிப்பு அல்ல. கண்முன்னே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊத்தையும், உடைசலுமாகிப் போன கனவுகளுமல்ல. வெறும் வாழ்க்கையின் கரடுமுரடான உடைசல்கள் உருவம் பெற முடியாத, கரடு தட்டிப்போன நேற்றும் இன்றும் நாளையும் ஆன எங்கள் வாழ்க்கை. இவை ஓர் ஒழுங்கான தத்துவத்துக்குள்ளோ, ஜாதிக்குள்ளோ, நம்பிக்கைக்குள்ளோ, சிந்தனைக் குறிக்கோளுக்குள்ளோ அடங்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு எனக்கும் உண்டு. இந்த வாழ்வின் இந்த அம்சங்களை என் முகத்தில் அறைந்து சொன்ன சத்தியங்களை உங்கள் முன் வைக்கவே இந்த நாவலை எழுதியிருக்கிறேன். இரண்டு நூற்றாண்டுகளாய் சிதிலமடைந்துபோன ஒரு ஜன சமூகத்தின் சரிவை நேரடியாகவும், செவி வழியாகவும், உணர்வின் வாசல்கள் வழியிலும் நான் அறிந்துகொண்ட உணர்வுகளை, உங்களுக்கும் மனசுக்குமாய் இடமாற்றம் செய்தது மட்டுமே எனது பணியாக இருந்தது.
இந்த நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வோர் அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவற்றையும், என்னையும் படித்துக் கண்ணீர்விட்டுக் களைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடிவந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும் பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும், இவற்றுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய்ச் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை. இவற்றின் கனவுத்தன்மைகளை முறித்து எறியக் கற்றுத்தந்து எனது கனவுகளை நிஜமாக்க இவற்றை மறுக்கவும் துறக்கவும் ஏற்கவும் கற்றுத்தந்த என் தந்தை எட்வர்டு கார்டன் கரமுண்டார் என்கிற முரட்டுக் கள்ள ஜாதி மனுஷனும் இன்று இல்லை.
- தஞ்சை ப்ரகாஷ்
Jandhu/ஜந்து- Pa.Raghavan/பா ராகவன்- PREBOOK
Regular price Rs. 310.00
பா. ராகவனின் புதிய நாவல்
சில குறிப்புகள்
பத்திரிகை உலகம் - பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான்.
ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை. எத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், எக்காலத்துக்கும் பொதுவானவை.
·
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி, இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான காலக்கட்டம், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு மிக முக்கியமான தருணம். அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்ததொரு கட்டமைப்பு, தனது அனைத்து ஆற்றல்களையும் பெருமைகளையும் ஆளுமையையும் உதிர்த்துவிட்டு முற்றிலும் வேறொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியதன் அடிப்படைகளை இந்நாவல் ஆராய்கிறது.
·
ஜந்துவில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் அத்தியாயம்தோறும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். யாருக்குமே உருவம் கிடையாது. குணமோ, குணமற்ற தன்மையோ கிடையாது. பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்றுமே நிகழும்போதே இல்லாமலும் போய்விடுகின்றன. நல்லது-கெட்டது என்ற இருமைக்கு வெளியேதான் அவர்கள் அத்தனை பேருமே உலவுகிறார்கள். பிரளயத்தில் படைப்பனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பின்பு புதையுண்ட நாகரிகத்தின் உயிருள்ள எச்சங்களாக அவர்களேதான் மீண்டெழுந்தும் வருகிறார்கள். எனவே ஒரு தோற்றத்தில் பிரம்மமாகவும் இன்னொரு தோற்றத்தில் கரப்பான்பூச்சியாகவும் காட்சியளிக்கிறார்கள்.
·
ஜந்துவின் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தனிச் சிறுகதை போலவும் மொத்தமாகப் படித்து முடிக்கும்போது ஒரு நாவலாகவும் தோற்றமளிக்கிறது. வாசிக்கும்போது எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் அத்தியாயம்தோறும் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஜந்து ஒரு நகைச்சுவை நாவலல்ல. குரூரங்களின் மீது மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைக்கு அங்கதமே பொருத்தமான ஆயுதம் என்று மௌனமாக இது உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
·
பின்னுரையில் சி. சரவண கார்த்திகேயன்
‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் செயல்படுவது இக்கதையில் ரசிக்க ரசிக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை மிகைச் சம்பவங்களை, மீஆசாமிகளை நம்பகமாகச் சொன்னது ஒரு சாதனைதான்!
ஜந்து - ஒரு நாவல்
ஆசிரியர்: பா. ராகவன்
முகப்பு வடிவமைப்பு: ராஜன் பி.ஆர் / விஜயன்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆகஸ்ட் 2024 வெளியீடு
Zen Kolai Vazhakku/ஜென் கொலை வழக்கு- Pa.Raghavan/பா ராகவன்- PREBOOK
Regular price Rs. 200.00
நவீன நாசகார ஜென் கதைகள்
சில குறிப்புகள்
நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக் குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.
பா. ராகவனின் இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே.
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு.
அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார்.
அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது.
இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.
—
ஜென் கொலை வழக்கு
நவீன நாசகார ஜென் கதைகள்
ஆசிரியர்: பா. ராகவன்
முகப்பு வடிவமைப்பு: விஜயன்
AI கோட்டோவியங்கள்: டேவி. சாம் ஆசீர்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆகஸ்ட் 2024 வெளியீடு
Oothuvathi Pul/ஊதுவத்திப் புல் - C.S.Sellapa/ சி.சு.செல்லப்பா
Regular price Rs. 380.00
இந்த நூலில் பிச்சமூர்த்தியின் ‘தரிசனப் பார்வை’ வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் ‘மகா' படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்). வ.வே. சுப்ரமணிய அய்யர் ‘தன் கவிதை' என்ற கட்டுரையில் ‘பேருண்மை, பேரனுபவம்' என்று குறிப்பிட்டு, இவற்றை உணர்த்துபவர்கள் உலக மகா கவிகள் என்று சொல்லி ஹோமர், வால்மீகி, வியாசர், ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பர் என்று பெயர்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். வ.ரா, பாரதியை அந்த வரிசையில் சேர்த்து ‘மகாகவி' என்று கணித்திருக்கிறார். பிச்சமூர்த்தியை அந்த வரிசையில் சேரத்தக்கவர் என்பது அவரது கவிதை சாதனையை வைத்து என் கணிப்பு மதிப்பீடு.
மேலே குறிப்பிட்ட அத்தனை கவிகளும் காவிய இயல் (கிளாஸிஸம்) கொள்கையாளர்கள். நவரசங்களையும் திறன்படக் கையாள்வது கிளாஸிஸத்தின் தலைசிறந்த லட்சணம். தற்காலத்தில் பாரதியும், பிச்சமூர்த்தியும் நவரசங்களையும் கையாண்டு இருப்பதோடு காவிய இயல் இதர லட்சணங்களையும் பொருத்தி இருக்கிறார்கள்.
- சி.சு. செல்லப்பா
Kaanuru Malar/கானுறு மலர்- Savitha/சவிதா
Regular price Rs. 160.00
இந்தக் கதைகளின் பெண்கள் மந்தையிலிருந்து விலகியவர்களோ மாற்றங்களை உருவாக்குபவர்களோ கிடையாது. வாழ்வு பெண்களின் மீது நிகழ்த்தும் எல்லா வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு தாழ்பணிந்து போகிறவர்கள். அன்பின் மற்றும் சமூக ஒழுங்குகளின் நிமித்தமாக தங்களை வழமைக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். பிறகு இழந்தவைகளின் அழுத்தம் தாளாது மெல்ல ஊன்றி மேலெழுந்து நின்று, வஞ்சிக்கப்பட்டதற்கான புகார்கள் இல்லாமல் தனக்கான இன்னொன்றை சுயமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். மடந்தையிலிருந்து பேரிளம்பெண் வரைக்குமான வெவ்வேறு பருவங்களில் பெண் வாழ்வு மினுங்கலாகவும் துலக்கமாகவும் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றது. வெளிப்படைத் தன்மையும் ரகசியமும் வெளிப்பாட்டு மொழியில் கதையின் தேவைக்கேற்ப வெளிப்படுகிறது. சவிதாவின் மொழி, இயல்பும் சரளமும் கொண்டதாக இருப்பது இந்தக் கதைகளின் வழி பயணிக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கதைகள்
எழுதப்பட வேண்டியவை மட்டுமல்ல, பரவலாக வாசிக்கப்பட வேண்டியவையும் கூட.
- அய்யனார் விஸ்வநாத்
Veyil Anindhavan/வெயில் அணிந்தவன்-Balajothi Ramachnadran/பாலஜோதி ராமச்சந்திரன்
Regular price Rs. 260.00
எழுதுகிறவன் செயல்படும்போது, அவன் அறியாமலே தன் போக்கில் சில முன் திட்டமிடாத கதவுகளைத் திறப்பான், அதை மூடாமலே விட்டு விட்டு இன்னொரு கதவைத் திறக்கப் போய்விடுவான். பாலஜோதியின் ஒரு கதையின் கண்ணி இன்னுமொரு கதையின் கண்ணியில் கோக்கப்படுகிறது. இதில் வரும் மனிதர் அதில் நடமாடுகிறார். உங்களை அந்தக் கதையில் பார்த்தேனே, அவர்தானே நீங்கள்? என்று கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நகர்ந்துவிடுகிறார்கள்.
ஒரு கதை வெயிலை அணிந்தால் இன்னொரு கதை அதைக் களைந்து வைக்கிறது. ஒரு தீனதயாளன் இன்னொரு கதையில் நடமாடுகிறார். ஒரு ஜெயராம் சார் பரோட்டா வாத்தியார் கதையில் ஜே. ஆர். சார் ஆகி சந்திரபாபு பாட்டுப் பாடுகிறார். மருதநாயகம் உட்கார்ந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் சுப்பு அண்ணா உட்கார்ந்திருக்கிறார். சூர்யா ஒரு திருநங்கை என்றால் மகாதேவியும் அப்படித்தான்.
- கல்யாணி.சி
Ezhuper/ஏழுபேர்-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்
Regular price Rs. 140.00
க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இவரது இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு இவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.
Stay up-to-date about new collections, events, discounts and more