PANGU SANDHAI AASAI BAYAM MATRAM/பங்குச் சந்தை ஆசை பயம் ஏமாற்றம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வாசகர்கள் நன்கறிந்த எழுத்தாளர் சோம வள்ளியப்பன் முதலில் அடையாளம் காணப்பட்டது, அவருடைய பங்குச் சந்தை புத்தகங்களுக்காக. அவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்தான் தமிழில் விரிவாக எழுதப்பட்ட முதல் பங்குச் சந்தை குறித்த புத்தகம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் பல்வேறு கூறுகளையும் தனித்தனியாகத் தொடர்ந்து அதே வரிசையில் எழுதிவருகிறார்.
அது, ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸோ, நேர மேலாண்மையோ, தலைமைப் பண்புகளோ. எழுதுவது எதுவாக இருந்தாலும், சோம வள்ளியப்பன் புத்தகங்கள் தெரியாத விடயங்களைத் தெளிவுபடுத்தும்; எளிமையாகவும் விரிவாகவும் இருக்கும் என்பது வாசகர்கள் கொண்டிருக்கும் முடிவு.
பங்குச் சந்தையில் பல ஆண்டுகளாக இயங்கியும் வெற்றி பெற இயலாதவர்கள், நடப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவும், தங்களை மாற்றிக்கொண்டு வெற்றி பெறவும் எழுதப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான புத்தகம், ‘பங்குச் சந்தை: ஆசை, பயம், ஏமாற்றம்.’
எப்படி செய்வது என்று தெரிந்திருந்தால் போதாது. எப்படி சரியாகச் செய்ய வேண்டும், எப்படி மட்டும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் உணர்வுகள் சார்ந்தவை. அவை குறித்து மேலை நாடுகளில் செய்யப்பட்டிருக்கும் ‘பிஹேவியரில் பைனான்ஸ்’ போன்றவை குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். தவிர பங்குச் சந்தையில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் விவரிக்கும் புத்தகம் இது.
- Non-Fiction
- ZDP Specifics
- Tamil