இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்களை மையமிட்டுச் சுழலும் இந்நாவலின் வழியாகச் சுடுசாம்பல் நிறம் நிலத்தை ஒருபோர்வையாகப் போர்த்துகிறது. மலையுச்சியில் நின்று மனித மனங்களின் தத்தளிப்பை ஆழமாக விசாரணை செய்கிறது இந்நாவல். கணியன் உருட்டும் சோழிகளைப் போல, எண்ணற்ற மனித மனங்களின் நிறங்களை அந்நிலத்தில் தூவியிருக்கிறார் சரவணன் சந்திரன். அதனூடே வளர்ந்த ஒற்றைச் சித்திரமே அசோகர்!
ReplyForward
Get Flat 15% off at checkout
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more